எங்க வழி தனி வழி..!! சுங்கச்சாவடிகளில் மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..

சென்னை ; நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிவழி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…
சுங்கச்சாவடிகளில் அவசர வாகனங்களுக்கான தனி வழியில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுங்கசவாடிகளில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கட்ட வேண்டிய சுங்க கட்டணம்  நிலுவையிலிருப்பதை கட்டுவது தொடர்பான வழக்கு,  இன்று விசரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளின் வாகனங்கள் செல்லும்போது உரிய வழி இல்லை என்றும், வாகனங்களில் நீதிபதிகளுக்கான சின்னம் இருந்தும், ஓட்டுநர் அடையாள அட்டை காண்பித்தாலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரக்குறைவாக நடப்பது தவிர்க்கப் பட வேண்டும் என்று  தெரிவித்தனர்…
மேலும், சுங்கசாவடிகளில் அவசர வாகனங்கள் செல்லும் வழிகளில், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்…
 
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment