உதயசூரியன் சின்னம் இனி எனக்கே..!!முக.அழகிரி போடும் ஸ்கெட்ச்..

திமுக தலைவர் கருணாநிதி இறந்ததில் இருந்து முக.அழகிரி தனக்கான வழியை உருவாக்கி கொண்டு இருந்தார்.குறிப்பாக தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கின்றார்கள்.அப்பாவிடம் என் ஆதங்கத்தை தெரிவித்தேன்.என்னுடைய பலத்தை நிரூபிப்பேன்.பொதுக்குழு மட்டும் அல்ல திமுக என அடுக்கடுக்கான கருத்துக்களை தெரிவித்தார்.அதுவும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைதி  பேரணி நடத்துவேன் என்றெல்லாம் கூறினார்.
ஆனால் நேற்று என்னை திமுகவில் இணைத்துக் கொண்டால் சேர்ந்து வேலைபார்க்க ரெடி என்றும் , ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்கின்றேன் என்றும் கூறினார்.ஆனால் தற்போது திமுகவுக்கு உதய சூரியன் சின்னத்தைக் கொடுத்த உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத்திடமும் முக.அழகிரி தரப்பு பேசியிருக்கிறார்கள் என்று செய்தி கசிந்துள்ளது.
முக. அழகிரியின் இந்த நடவடிக்கை தீடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

author avatar
Dinasuvadu desk

Leave a Comment