ஈரோடு மூலப்பாளையத்தில் நடந்துசென்ற பெண்ணிடம் நகை பறிப்பு..!

ஈரோடு:

ஈரோடு மூலப்பாளையம் என்.ஜி.ஓ. காலனி வீதியில் நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 2 பவுன் செயினை திடீரென பறித்து கொண்டு மின்னலாய் மறைந்தான்.

அந்த பெண் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த ஆசாமி மாயமாகிவிட்டான். அவனுக்கு 20 வயதிலிருந்து 25 வயதுதான் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த இடம் அருகே ரோட்டோரம் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது. அந்த கடையின் வெளியே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் வழிப்பறி ஆசாமியின் உருவம் பதிவாகி இருக்கும் அதை பார்த்து குற்றவாளியை பிடித்து விடலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment