ஈரோடு அருகே குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

கண்மாயில் குளித்த சிறுவர்கள் 3 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி கலைஞர் நகரைச் சேர்ந்த நண்பர்கள், கௌதம், ராஜ்குமார், சஞ்சய் ஆகியோர், அருகே உள்ள நல்லூர் கண்மாயில் இன்று குளிக்கச் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத மூவரும், தண்ணீரில் விளையாடியபோது, அடுத்தடுத்து நீரில் மூழ்கியுள்ளனர். அங்கு கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதைக் கண்டு, சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் மூவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்தை அறிந்து அங்கு வந்த கிராம மக்கள் சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

தகவலின்பேரில் வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார், மூவரின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், 3 சிறுவர்கள் உயிரிழந்திருப்பது கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment