ஈரான் அதிபருடன் புதின் திடீர் சந்தித்து ஆலோசனை..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ஈரான் அதிபருடன் ஆலோசனை நடத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கண்காணிப்பாளராக மட்டுமே உள்ள ஈரானுக்கு இந்த அமைப்பில் நிரந்தர இடம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ரஷியா மேற்கொள்ளும் என ரவுகானியிடம் புதின் உறுதி அளித்துள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை சீர்குலைக்க முயலும் சக்திகளை எதிர்த்து போராடுவதில் ஈரானும், ரஷியாவும் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment