இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்….!!

இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்….!!

இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 28ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர், கப்பலைக் கொண்டு மோதி விசைப்படகை மூழ்கடித்தனர். படகில் இருந்து குதித்து நீந்திய மீனவர்கள் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையின் செயலுக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும், சிறையில் வாடும் 4 மீனவர்களை மீட்டு, படகுகளை இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி, இன்று ஒருநாள் மட்டும் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *