இலங்கைக் கடற்படையினர் அத்துமீறவில்லை : அலாக் பட்நாகர் ..!

இந்திய கடல் எல்லைக்குள் இலங்கைக் கடற்படையினர் அத்து மீறி நுழைவதாக கூறப்படும் குற்றச்சாட்டை, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பிராந்திய தலைமை அதிகாரி அலாக் பட்நாகர் மறுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார்குளத்தில் உள்ள கடலோர காவல்படை விமான தளத்தில், எல்லைப் பாதுகாப்பு மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லை தாண்டாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு தமிழக மீனவர்களுக்கு ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.

கடலோர காவல்படை, சுங்கத்துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகிய துறைகளின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment