இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு பட்ஜெட்டில்  தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையின்படி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மருத்துவமனை அமைவதற்கான இடங்களாக மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை உள்ளிட்ட 5 இடங்களை தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரைத்திருந்தது.

அண்மையில் மதுரை தோப்பூர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தோப்பூரில் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை தோப்பூரில் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

இக் கூட்டத்தில் மதுரை தோப்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment