இன்று மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலை ஐயப்பன்   கோயிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜை நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த தங்க அங்கி கடந்த 22ந் தேதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரப்பட்டது.இன்று பூஜை முடிந்தவுடன் நடை சாத்தப்படுவதால், 41 நாட்கள் மண்டல பூஜை முடிவிற்கு வரும். இதனை அடுத்து மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ந் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.

source: dinasuvadu.com

Leave a Comment