இனி சீருடையுடன் ‘ஷூ’வும்”..!டேப் ” மூலம் பாடமும் நடத்த நடவடிக்கை..! அமைச்சர் செங்கோட்டையன்..!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் 6 முதல் 8ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்தை டேப் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு பள்ளிகளுக்கு டேப் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மகப்பேறு விடுப்புக்கு செல்லும் பெண் ஆசிரியர்கள் இடத்திற்கு, தற்காலிக ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மடிகணிணிகள் ஜனவரி முதல் வாரத்தில் +1, +2 மாணவர்களுக்கு வழங்கப்படும். மருத்துவராக விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் அரசு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.என்று தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment