இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் மன்மோகன்சிங் : மோடி குற்றச்சாட்டு..!

பிரதமர் மோடி மீது , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.ஏனெனில் மோடி இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தர் என்றும் பொருளாதாரம் முடங்கிப்போனதாகவும் கூறினார்.

இதுகுறித்து மோடி , ஸ்வராஜ்யா பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், தாம் பொறுப்பேற்ற 2014ம் ஆண்டில் இந்தியப்பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததாகவும்,  முதலீடு குறைந்ததாகவும் கூறினார். அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் அவர்களின் கூட்டு முயற்றி அனைத்தும் பயனற்றது மற்றும் இந்த பொருளாதாரத்தை வீண் செய்தார்கள் என்றும் கூறினார்.

நான் பிரதமராக பொறுப்பேற்றபோது இந்தியாவின் நிலை மிகவும் கவைக்கிடமாக இருந்தது.அதை முன்னெடுத்துச்செல்லவது பெரும் சவாலாக இருந்ததாக கூறினார்.மேலும் தாம் கொண்டுவந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைமூலம் இந்திய பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் வந்துள்ளதாகவும் , தொழிலாளர் காப்பீடு அமைப்பு, முத்ரா சுயதொழில் திட்டம் மூலம் தொழில்துறை முன்னேறியுள்ளதாகவும் அந்நிய முதலீட்டை பெருக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment