இந்தியா பயன்படுத்தாத சிந்துநதி நீர் பங்காளிக்கு செல்ல கூடாது…!!அணைகளால் பங்காளியை அடைக்கும் இந்தியா!!!!

இந்தியா பயன்படுத்தாத சிந்து நதி  நீர் பாகிஸ்தான் செல்வதை தடுக்கும் விதத்தில் 2 அணைகள் கட்டுவது உள்ளிட்ட மூன்று திட்டங்களை இந்திய அரசு விரைவுபடுத்த  முடிவு செய்துள்ளது.

இந்த திட்டமானது இந்திய-பாகிஸ்தான் சிந்துநதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தின் படி சுமார் 93 சதவீத தண்ணீரை மட்டும் இந்தியா தற்போது வரை பயன்படுத்தி வருகிறது.ஆனால் இந்தியா பயன்படுத்தாத மீதம் உள்ள நீர் வீணாக பாகிஸ்தானுக்கு சென்றடைகிறது. இதனை தடுக்கும் விதத்திலும்  ஜம்மு காஷ்மீர் நீர் பிரச்சணை தடுக்கும் விதத்திலும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் ஷபுர்கன்டி அணை மற்று ஜம்மு காஷ்மீரில் உஜ் அணை , சட்லஜ் – பியாஸ் நதிகள் இணைப்பு இந்த மூன்று திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பே செயல்படுத்த வேண்டிய இந்த திட்டம் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் 2 மாநில அரசுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக  திட்டங்கள் முடங்கி கிடக்கும்  நிலையில் திட்டத்திற்கு தேவையான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளதாகவும் திட்டத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment