இந்தியா அபாரம்! சதமடித்து இலக்கை நோக்கி விரையும் கோலி!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் ஆட்டத்தில் 298 ரன்கள் குவித்தது. தற்போது கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இந்திய கேப்டன் விராட் வழக்கம்போல் சதமடித்துள்ளார்.

அவர் 112 பந்துகளில் 104 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். எனினும் தற்போது வரை 38 பந்துகளில் 57 ரன் அடித்தால் போதும் என்ற எளிதான இலக்குடன் இந்தியா களத்தில் உள்ளது. ஆடுகளத்தில் மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

author avatar
Srimahath

Leave a Comment