இது சுயநலமல்ல பொதுநலம்- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறியது என்ன…??

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி ரசிகர்கள் நடத்திய கூட்டத்தில் வீடியோவில் பேசினார். அதில், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது தன் நோக்கம் என அவர் கூறியுள்ளார். மேலும், “அரசியல் என்பது சுயநலமல்ல பொதுநலம். மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம். ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். குடும்பத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வரவேண்டும் என நான் சொல்லவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment