இஞ்சி டீ இவ்வளவு பிரச்னையை ஏற்படுத்துமா!
இஞ்சி டீ இவ்வளவு பிரச்னையை ஏற்படுத்துமா!
இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.இதனால் தான் சீனாவில் இஞ்சியை ஆயுர்வேத மருத்துவத்தில் சேர்த்துள்ளனர்.இஞ்சி நெஞ்சு எரிச்சல்,அஜீரண கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.நம்மில் பலர் இஞ்சிடீ குடிக்கின்றனர்.இஞ்சியில் உடலுக்கு நன்மை இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும்.
இஞ்சிடீ அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வாய்எரிச்சல்,குமட்டல்,நெஞ்சிஎரிச்சல்,வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
இஞ்சி டீ உடலில் அதிகமாக சேரும் போது அது உடலில் அமில உற்பத்தியை அதிகபடுத்தும்.இதனால் அசிடிட்டி உண்டாகும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இஞ்சிடீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இஞ்சிடீ உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.இதனால் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
ஒருசிலர் இஞ்சி டீ அதிகமா விரும்பி அருந்துவார்கள்.இதனால் அவர்களுக்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டு தூக்கமின்மை மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.இதனால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எதாவது உடல்நலக்கோளாறு காரணமாக உடலில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும்.அவ்வாறு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு இஞ்சி டீ குடிக்க கூடாது.அறுவைசிகிச்சை செய்யும் போது மயக்கத்திற்க்காக கொடுக்கபடும் மருந்திற்கு எதிராக இஞ்சி செயல்படும்.இதனால் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் புண்,இரத்தக்கசிவு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பிணி பெண்கள் வாந்தி,குமட்டல் ஏற்படும்போது இஞ்சி டீ அருந்த ஆசைப்படுவார்கள்.அவ்வாறு அருந்துவதால் குழந்தையின் உடலுக்கு பிரச்சனை ஏற்படும்.மேலும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.