இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா பிரிஸ்பேனில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-இந்திய அணி வேகமான ஆடுகளமான பெர்த், பிரிஸ்பேன் மைதானத்தில் விளையாடி இருக்கிறது.ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் உயரமானவர்கள். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உயரமானவர்கள் கிடையாது.இந்திய அணி வீரர்கள் இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதும் உறுதியுடன் இங்கு வந்துள்ளனர்.ஆஸ்திரேலிய வீரர்கள் சவாலை சந்திக்க தயாராக உள்ளனர்.
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் காத்து இருக்கிறது.ஆஸ்திரேலிய அணியினரின் பந்து வீச்சு சவால் அளிக்கும். ஆனாலும் சவாலுக்கு நாம் தயாராகவே வந்துள்ளோம்.ஆஸ்திரேலிய அணியின் மண்ணில் சிறப்பாக செயல்பட்டு நாம் முத்திரை பதிக்க வேண்டும்.கடந்த முறை நாம் இங்கு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடினோம். 2 போட்டியில் தோல்வியை சந்தித்தோம். ஒரு போட்டியில் ‘டிரா’ செய்தோம்.இந்த முறை தனிச் சிறப்பாக செயல்பட்டு முந்தைய நிலைமையை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.அடுத்த ஆண்டு உலக கோப்பை நடைபெற இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் வெற்றி பெற்றால் நல்ல நம்பிக்கை கிடைக்கும். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது என்பது எப்பொழுதும் அபாயகரமானது என்பதில் சந்தேகமில்லை.எங்களிடம் தரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அது எளிதான காரியமல்ல. ஆனாலும் எங்களிடம் தரமான வீரர்கள் உள்ளனர்.இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி நம்மை மாற்றி கொண்டு செயல்படுவதற்கு ஏதுவாகவே முன்கூட்டியே இங்கு வந்துள்ளோம். சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது குறித்து தான் சிந்தித்து வருகிறோம்.என்று இந்திய அணியின் ரோகித் சர்மா கூறினார்.
DINASUVADU.COM