ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் ,அமைச்சர் ஜெயக்குமாரை கிண்டல்…!

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் ,அமைச்சர் ஜெயக்குமாரை கிண்டல்…!

சென்னை; ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர் தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன் ஓ.பி.எஸ். புகாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். உண்மையான தொண்டர்கள் அனைவரும் தன் பக்கம் உள்ளனர். டிடிவி.தினகரன் ஒரு மாயமான் என்று ஓ.பி.எஸ். விமர்சித்திருந்தார். பதவியை விட முக்கியம் என நினைப்பவர்கள் அதிமுகவில் உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அணி   ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தது என்று டிடிவி குற்றம்சாட்டினார். மற்றும் அமைச்சர் ஜெயக்குமாரை ஆமைத் தலையர் என்று டிடிவி.தினகரன் கிண்டல் செய்துள்ளார். ரூ.20 நோட்டை கொடுத்து கடன் சொல்லி வாக்கு கேட்பதை மக்கள் ஏற்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும் ஆர்.கே.நகரில் தோல்வி அடைந்தவர்கள் என்னை என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் எனவும் டிடிவி கூறியுள்ளார். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதற்காக சசிகலா புஷ்பா வாழ்த்து தெரிவித்தார் மற்றும் எதிர்காலத்தில் எங்கள் அணியுடன் இணைந்து பணியாற்ற சசிகலா புஷ்பா விருப்பம் தெரிவித்துள்ளார்…

sources;dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *