அரசு பங்களாவை காலி செய்து வெளியேறினார் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்..!

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரான அகிலேஷ் யாதவ், தாம் வசித்த அரசு பங்களாவை முழுவதுமாக காலி செய்து விட்டு வெளியேறினார்.

அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் அரசு வழங்கிய பங்களாக்களிலேயே வசித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களை அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து முலாயம் சிங் யாதவும், அகிலேஷ் யாதவும், லக்னோவில் தாங்கள் தங்கி இருந்த அரசு பங்களாக்களை காலி செய்தனர். சுல்தான்பூர் சாலையில் தங்களுக்கு சொந்தமாக உள்ள பங்களாக்களில் இருவரும் குடும்பத்துடன் குடியேறினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment