அரசியல் நையாண்டி: ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் முறைப்படுத்தலாம்…??

என்ன செய்தாலும் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவே முடியாது. ஆனால் அதற்குப் பதில். “அந்த ஏரியாவில் ஆறாயிரம் ருபாய் கொடுத்தார்கள். எங்கள் ஏரியாவில் நாலாயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள்.பாக்கி இரண்டாயிரம் ரூபாயை இடைத்தரகர்கள் அமுக்கிவிட்டார்கள்” என்று ஏராளமான வாக்காளர்கள் புகார் செய்த வண்ணம் உள்ளார்கள். சாலை மறியல் கூட செய்கிறார்கள்.அது போன்ற புகார்களை தேர்தல் ஆணையம் விசாரித்து பணப்பட்டுவாடாவை நெறிப்படுத்தலாம். எல்லா ஏரியாக்களுக்கும் பாரபட்சமின்றி ஒரே அளவிலான பணப்பட்டுவாடாவை உறுதிப்படுத்தலாம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment