அரசியலில் ரஜினி : ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ரஜினி தான் அரசியல் குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதியன்று வெளியிடுவதாக இருந்தார். அதேபோல் இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினி தான் அரசியலில் இறங்குவதாகவும், வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஒருவருடமாக தமிழகம் மோசமாக செயல்பட்டதாகவும், இப்போதும் நான் ஒன்றும் செய்யாமல் இருந்தால் என்னை வாழ வைத்த தமிழ்மக்களுக்கு நான் செய்யும் துரோகம் அது தன்னை தூங்க விடாது எனவும் பேசினார். மேலும் பேசும்போது, காலத்தின் கட்டாயம் காரணமாக தான் அரசியலில் இறங்குவதாகவும், சட்ட மன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும், மேலும் பாராளுமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடை தேர்தலின்போது அறிவிப்பேன் எனவும் பேசினார்.

இதனை பல்வேறு மாவட்டங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சேலம், திருச்சி சென்னை என அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment