அம்ரூத் திட்ட கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா…. எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்…!!

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானபணியை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை தெலுங்குப்பாளையம் பகுதியில் உள்ள செல்வபுரம்,இந்திரா நகர் பகுதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மூடியுடன் கூடிய மழை நீர் வடிகால்,10 லட்சம் ரூபாய் மதிப்பில் வரிவசூல் மையம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகிய கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதுவக்கிவைத்தார். மேலும் தற்போதுள்ள 200 சதுர அடி குடியிருப்புகள் 400 சதுர அடியாக கட்டித்தரப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment