அதிமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு..!!

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மீது, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என சட்டத்துறைஅமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் பனையபுரம், சிறுவள்ளிகுப்பம், வாக்கூர் உள்ளிட்ட 10 இடங்களில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து பேசினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குட்கா விசாரணை தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜின் குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார், அது மட்டுமில்லாமல் முன்னாள் காவல் ஜார்ஜின் குற்றச்சாட்டுகள் எதுமே அடிப்படை ஆதராமற்றவை என்று அவர் கூறினார்.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment