அதிமுகவிற்கு எல்லாம் எனக்கு பயமில்லை…மிக்சி…கிரைண்டரை வெட்டி கொண்டாடிய வேங்கை மகன்….!!வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்..!!!

நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ்,AR முருகதாஸ் நடிகை வரலட்சுமி சரத்குமார்,என பலர் நடித்து திரையரங்கில் வெறித்தனமான வெற்றியை நோக்கி ஒடி கொண்டிருக்கும் படம் சர்கார் இந்த படத்திற்கு இசைபுயல் AR ரகுமான் இசையமைத்துள்ளார் படத்தின் பாடல்கள் அனைத்தும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.படத்தை சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலக முழுவதும் தீபாவளியன்று ரிலீஸ் செய்தது.

படம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் திட்டங்களை எதிர்த்ததால் அரசியல்வாதிகள் கடும்  கண்டனங்களைத் தெரிவித்தனர்.சர்கார் படம் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது  தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும்  படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற்பெயரை சூட்டியது.அதிமுகவினரை கோபம் அடையசெய்தது.இந்நிலையில் அதிமுக அமைச்சர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருந்தனர்.இதற்கிடையே சர்கார் வெளியாகிய தியேட்டர்களில்  போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கி விஜயின் பேனர்கள், கட் அவுட்களை கிழித்தும்,மிதித்தும் ரகளையில் ஈடுபட்டுனர். படத்தில் இலவசப் பொருட்களை மக்கள் எரிக்கும் காட்சி அரசை இழிவுபடுத்துவதாக கூறிய படத்தை இயக்கிய முருகதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டது.இதில் அவர் முன் ஜாமீன் பெற்றார்.

இதனிடையே படத்தின் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் நீக்கப்பட்டது.மீயூட் செய்யப்பட்டது,பின் படம் வெளியாகி ஒடிகொண்டிருக்கிறது.நீங்கள் நீக்கிய காட்சியை நாங்கள் பகிர்கிறோம் என்று விஜய் ரசிகர்கள் இலவச பொருட்களை எரிக்கும் காட்சியை சமூகவலையதளங்களில் பதிவிட்டு சர்கார் புரட்சி ஆரம்பம் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டில் உள்ள இலவச பொருட்களை தூக்கி எரிந்து உடைத்தும்,எரித்தும் தங்கள் எதிர்ப்பை எதிவித்த நிலையில் இது அரசியல்வாதிகளை ஒரு நொடி அதிர்ச்சியடைய செய்தது.விஜயின் போஸ்டர் கிழிக்கப்பட்டது.அதனை சாலையோறும் கடைவைத்துருக்கும் வியாபாரிகளுக்கு வழங்கினர் விஜய் ரசிகர்கள்.இப்படி சர்ச்சை எத்தனை இருந்தாலும் தனது வசூலில் குறைவில்லாமல் நொறுக்கிவருகிறது சர்கார்.பாக்ஸ்ஆபிஸ் கிங் விஜய் தற்போது பாக்ஸ் ஆபிஸ் மான்செஸ்டார்  என்று கூறும் அளவிற்கு நாடு முழுவதும் மரண வசூலை அடித்து நொறுக்கியுள்ளது.

இதனிடையே நேற்று ஒரு சூப்பரான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது படத்தின் வெற்றி தறுமாறாக திரையரங்கையும்,அரசியல்வாதிகளையும் கிழித்தெடுத்த நிலையில் படத்தின் அசுர வெற்றியை விஜய் தனது சர்கார் படக்குழுவுடன் கொண்டாடினார்.இந்த கொண்டாட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்,நடிகை வரலட்சுமி சரத்குமார்,AR முருகதாஸ்,AR ரகுமான்,பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் சுவரஸ்சிய விஷயம் என்னவென்றால் கேக் தான் நீங்க நல்ல கேக்க பாருங்க அதில் தெரியுதா..?என்ன இருக்குனு…யார் சொன்ன தளபதி வாய்திறக்கலனு..கேக் மூலமா சொல்லிடாரு எங்க தளபதி என்று ரசிக வட்டாரம் பகிர்ந்து வருகிறது.இந்த காட்சிக்கு தான் போராட்டம்,பேனர் கிழிப்பு என்று சர்ச்சை வெடித்தது.ஆனால் நடிகர் விஜ்ய் ஒரே கேக்கில் அனைத்து வாய்களையும் அடைத்துவிட்டார் என்று ரசிக வட்டார தகவல்கள் கசிகின்றன. சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.மீம்ஸ் வெறியர்கலும் சமூக வலையதளங்களில் தெறிக்கவிடுகின்றனர்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment