அடுத்த 24 மணிநேரத்திற்கு,தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை….!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு, மழை பெய்ய வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யவில்லை என்றும் வறண்ட வானிலையே காணப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு, ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment