அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன் : நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி இயக்குநர் சலங்கை துரை இயக்கும், ‘இ.பி.கோ. 302′ என்கிற பெயரில் வெளிவரவிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவர்  துர்கா ஐ.பி.எஸ். என்கிற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த போது,நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்காக பல கட்சிகள் என்னை அழைத்தன. விருப்பம் இல்லாததால் மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், அரசியல் குறித்து பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன் என்றும், சுயேட்சையாக நிற்க மாட்டேன் என்றும்  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment