“நாளை 14 மணி நேரத்திற்கு பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது” – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!

இந்திய ரிசர்வ் வங்கியானது, ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, 14 மணி நேரம்  பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.

மக்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்ப  RTGS மற்றும் NEFT என்ற ரிசர்வ் வங்கி முறையைதான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.அதிலும்,RTGS  மூலம் பணத்தை அனுப்பும்போது அது உடனடியாக சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு உடனே சென்றுவிடும்.ஆனால், NEFT மூலம் பணம் அனுப்பினால், ஒரு மணி நேரம் கழித்துதான் அவர்களின் கணக்கில் பணம் ஏறும்.இக்காரணத்தினால் அதிக அளவு மக்கள் RTGSயை  பயன்படுத்துகின்றனர்.

எனினும், RTGS மூலம் குறைந்தபட்சமாக ரூ. 2 லட்சம் வரையிலான பணத்தை மட்டுமே அனுப்ப இயலும்,ஆனால் NEFT மூலம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அனுப்ப முடியும்.மேலும்,NEFT மூலமாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை, நாள் ஒன்றுக்கு 9 கட்டங்களாக மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.

இந்த நிலையில்,இந்திய ரிசர்வ் வங்கியானது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி,நாளை 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.ஏனெனில்,தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், நாளை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணப் பரிவர்த்தனை நடைபெறாது என்றும் அதே சமயம் NEFT முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

12 mins ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

2 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

4 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

5 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

5 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

5 hours ago