தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு..!

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஆவணங்கள் சேகரிக்கப்படுகிறது. 2-வது கட்டமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 3-வதாக இறுதி விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சேகரிக்கப்ப‌ட்டு வருகின்றன.

மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தையொட்டி வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வந்த புகைப்படங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. உறுதிபடுத்தப்பட்ட ஆவணம், வழக்கு தொடர்பான உறுதிபடுத்தப்படாத ஆவணங்களும் சேகரிக்கப்படுகிறது. இதற்காக சம்பவம் நடந்த ஒவ்வொரு இடத்திலும் போலீசார் மீண்டும், மீண்டும் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணை முழுவதும் ரகசியமாக நடத்தப்படுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்தவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் இன்று தூத்துக்குடிக்கு வந்தார்.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பி.க்கள் சேகரித்த விவரங்களை அவர் கேட்டறிகிறார். தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் அவர் விசாரணை நடத்த உள்ளார்.

Dinasuvadu desk

Recent Posts

இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!

Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…

58 seconds ago

காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு… இது ராகுல் கியாரண்டி.!

Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய…

21 mins ago

என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அரிய வகை நோயால் பெல்ஜியம் நபர் பாதிப்பு!

Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்ப உள்ள காலகட்டத்தில்…

37 mins ago

அரசியல் மாற்றங்களின் போது ராகுல் நாட்டில் இருப்பதில்லை.! – பினராயி விஜயன்

Pinarayi Vijayan: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துப்பது அவரது பக்குவமற்ற அரசியலை எடுத்துரைக்கிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக…

44 mins ago

ஒரே பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை! ஸ்ரீ லீலாவுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க!

Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட…

55 mins ago

ரூ.16 லட்சம் கோடியில் என்னல்லாம் செய்திருக்க முடியும்.? ராகுலின் மெகா லிஸ்ட்…

Rahul Gandhi : பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த கடன் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2014ஆம்…

1 hour ago