Categories: சென்னை

சீட் பெல்ட் அணியாததால் ஓட்டுனரை தாக்கிய போலீஸ்-காா் ஓட்டுநா் தீக்குளிப்பு

சென்னை அருகே சீட் பெல்ட் அணியாததால் காா் ஓட்டுநரை போக்குவரத்து காவலா்கள் கண்டித்ததால் மன உளைச்சலடைந்த ஓட்டுநா் தீக்குளித்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பழைய மகாபல்லிபுரம் அருகே தனியாா் காா் ஓட்டுநரான மணிகண்டன் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலா்கள் காரை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாமல் வந்தது தெரியவந்துள்ளது. இதனை போக்குவரத்து அதிகாரிகள் விசாரிக்க, இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையினா் மணிகண்டனை தாக்கியுள்ளனர். இதனால் மனஉளைச்சலடைந்த மணிகண்டன் காரில் இருந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளாா். அவரை தற்போது மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமாா் 3 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu desk

Recent Posts

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

1 min ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

24 mins ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

31 mins ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

8 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

10 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

11 hours ago