அதிரடி மாற்றம்: ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக இலங்கை..! இந்தியா -இலங்கை மோதல் ..!

இந்திய அணி ,  தென்னாபிரிக்கா அணியுடன் டி 20 போட்டிகளில் விளையாடியது.இப்போட்டி டிராவில் முடிந்து உள்ளது.இதை தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். முதல் போட்டி வரும் அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ,07 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே அணியுடன் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்தது. தற்போது ஜிம்பாப்வே அணியை ஐசிசி ரத்து செய்தது.இதை தொடர்ந்து இலங்கை அணிக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்தது.

அழைப்பை ஏற்று கொண்ட இலங்கை அணி 05 ,07 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்திய அணியுடன்  3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.அதற்கான அட்டவணையை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ இணைதளத்தில் பதிவிட்டு உள்ளது.

author avatar
murugan