அன்புள்ள விஜய் சேதுபதி! நீங்கள் வலிமையான நபர்! – குஷ்பூ பாராட்டு

விஜய் சேதுபதி குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட பாஜக பிரமுகர் குஷ்பூ. 

இலங்கையில் பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வராரு படத்தில், முரளிதரன் கதாபாத்திரத்தில், நடிகர் விஐய் சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தது. காரணம் என்னவென்றால், முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், சிங்களவர்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், இந்த எதிர்ப்புகள் எழுந்தது.

இந்நிலையில், பல போராட்டத்திற்கு மத்தியில், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ட்வீட்டர் மூலம் , விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்க்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக பிரமுகரான குஷ்பூ இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள விஜய் சேதுபதி, நீங்கள் வலிமையான நபர். நீங்கள் இருப்பது போலவே இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் வந்திருப்பது காட்டுமிராண்டி தனமானது. விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். நீங்கள் செய்ததை செய்ய பெரிய மனது வேண்டும். நாங்கள் உங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.