தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் : நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு பிரபலமான நகைசுவை நடிகர். இவர் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தண்ணீர் பிரச்சனை எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இன்றைய உலகில் மற்றவர்களுக்கு உதவும் குணம் மனிதர்களிடம் குறைந்து வருகிறது என்றும், முன்பெல்லாம் ஓரிடத்திற்கு வந்தால் தங்க வைத்து தண்ணீர் தருவார்கள், இன்று தனியாக இருந்தால் கழுத்தை அறுத்து விடுகின்றனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.