இளைஞரை கடத்தி கொலை செய்த கந்துவட்டி கும்பல்..!

  • பேயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்த இடத்தில் அவருக்கு பணம் கொடுக்காத காரணத்தினால், வட்டியை கட்ட முடியாமல் தவித்தார்.
  • அவரை அடைத்துவைத்து, வட்டிக்கு மேல் வட்டி போட்டு வாங்கிய பணத்திற்கு மூன்று மடங்கு அதிகமாய் வட்டி போட்டு, அவரை தாக்கியதால் அவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூர் மறைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர், ஆழ்வார்திருநகரியில் உள்ள வட்டித் தொழில் செய்யும் கண்ணன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கினார்.

இவர் பெயின்டிங் காண்ட்ராக்ட் எடுத்த இடத்தில் அவருக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் வட்டி கட்டமுடியாமல் தவித்து வந்தார். சாகுல்ஹமீதிடம் பலமுறை கேட்டும் வட்டி பணத்தை கேட்டாததால், ஆத்திரத்தில் கண்ணன், சாகுல் ஹமீதை தனது ஆதரவாளர்களான 6 பேருடன் சேர்ந்து கடந்த 17ம் தேதி காரில் கடத்திச் சென்றார்.

அங்கு அவரை அடைத்துவைத்து, வட்டிக்கு மேல் வட்டி போட்டு வாங்கிய பணத்திற்கு மூன்று மடங்கு அதிகமாய் பணம் கேட்டு அவரை கடுமையாக தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவரை வீட்டிற்கு அழைத்து வந்து வேற்று பேப்பரில் விறல் ரேகையை வாங்கி கொண்டு சென்றனர்.

பலத்த காயம் அடைந்த அவரை வீட்டில் உள்ளவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். ஆந்த 6 நபர்களில் 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கண்ணன் உட்பட மீதம் உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.

அந்த கும்பலின் தலைவரான கண்ணனை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.