இருசக்கர வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர்கள்.!

  • கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
  • இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தின் ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வெண்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்தும், அவரது நண்பர் தீனாவும், இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரிஷிவந்தியம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எதிரே வந்த அரசுப் பேருந்தின் ஓட்டுனர் மோதியதை அடுத்து தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்