மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த கிரிக்கெட் வீரர்

மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த கிரிக்கெட் வீரர்

  • மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்.
  • மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது வழியில் உயிரிழந்தார்

நேற்று மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் கிரிக்கெட் வீரர் சோனு யாதவ், அந்த மாநிலத்தின் டிவிஷன் போட்டிகளில் ஆடி வருகிறார். 

இவர் விரைவில் மாநில அணிக்காக ஆட இருப்பதாக மேற்கு வங்க கிரிக்கெட் போர்ட் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த சோனு யாதவ்,  பயிற்சியின் நடுவிலே திடீரென மயங்கி விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது வழியில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.

இதை அறிந்த அவரது சக வீரர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Vignesh
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *