இரவு நேரங்களில் வேலை பார்க்கும் பெண்களா நீங்க ! முதலில் இந்த விஷத்தை தெரிந்து வைத்து கொள்ளுங்க !

இன்றைய கால கட்டத்தில் ஆண்கள்  மற்றும் பெண்கள் இருவரும் இணைந்து வேலை செய்தால் தான் குடும்பத்தை நன்றாக கொண்டு செல்ல முடிகிறது. இந்நிலையில் சில பகல் மற்றும் இரவு  நேரங்களில் அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்  பெண்கள் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை செய்வதால் நமது உடலுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த பதிப்பில் நாம் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை பார்ப்பதால் நடக்கும் தீமைகளை பற்றி படித்தறியலாம்.

இரவு நேரங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் முன்னாடியே வந்து விடும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் நடத்த பட்ட ஆய்வுகள் கூறுகிறது. இந்த ஆய்வை 22 ஆண்டுகளாக இரவு நேரம் வேலைக்கு சென்ற செவிலியர்களை வைத்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் கண்டறிய பட்டுள்ளது.

மேலும் நாம் இவ்வாறு இரவு நேரங்களில் வேலை செய்வதால் மனஅழுத்தம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது,மேலும் ஈஸ்டரோஜென் எனும் ஹார்மோன் பாலியல் ஹார்மோன்களை அழித்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதால் மனஅழுத்தம் ஏற்பட்டு ஒரு பெண்ணின் உடல் கருத்தரிப்பு முட்டை உற்பத்தியை நிறுத்தி விடுகிறது.

மேலும் மனஅழுத்தம் காரணமாக இதயநோய் வருவதற்கான வாய்ப்புகளும் இருந்து வருகிறதாம். நினைவாக பிரச்சனையும் உண்டாகலாம்.