நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை இயக்குகிறது : நடிகர் சூர்யா

நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை இயக்குகிறது : நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அன்பே தவம், அன்பே வரம். வெற்றி தோல்விகளை கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்கள் என் வரம். நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *