அடப் பாவிகளா! நான் சொன்னது ஒரு தத்துவம்! ஓவியாவுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள்!

  • ஓவியாவுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள்.
  • அடப் பாவிக.ளா! நான் சொன்னது ஒரு தத்துவம்

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அவருக்கென்று தனியாக ஆர்மி குழுக்களும் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இவர் தனது இணையபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் ‘வாழ்க்கைக்கு அர்த்தமில்லை’ என ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக, கவலை வேண்டாம், நாங்கள் உங்களுடனே இருக்கிறோம். எல்லாம் கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று பதிலளித்துள்ளார்.

இதனை பார்த்த ஓவியா, அவர்களுக்கு மறுப்பதிலாக, அடப் பாவிகளா? நான் சொன்னது ஒரு தத்துவம். எனக்கு ஒன்றும் ஆகவில்லை’ என பதில் அளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.