இனி உங்களால் பந்தை முத்தமிட முடியாது -மலிங்காவை கேலி செய்த சச்சின்

சச்சின் டெண்டுல்கர்  மூத்த பந்துவீச்சாளர் மலிங்காவை இனி தன் பந்துவீச்சு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி கிடைக் கின்றனர். இந்நிலையில்எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்காலிகமாக தடை விதித்து உள்ளது

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் இந்த விதியால் மூத்த பந்துவீச்சாளர் மலிங்காவை இனி தன் பந்துவீச்சு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் .மேலும்  பந்துவீசும் முன் பந்தை முத்தமிடுவார். அவர் இனி பந்தை முத்தமிட முடியாது எனவும் மலிங்கா புகைப்படத்தை ட்வீட்டரில் பதிவு செய்து கேலியாக  குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.