வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம்…ஆந்திர முதல்வர் குற்றசாட்டு…!!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று ஆந்திர மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

அமராவதியில் தனது கட்சி கோட்டத்தில் பங்கேற்று பேசிய தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் , ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயிடு பேசுகையில் , ஒரு மென்பொருளை வடிவமைத்தவர் அதை மாற்றியமைக்க முடியும் , தேர்தல் ஆணையம் நடுவர் போல செயல்பட வேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில் வளர்ந்த நாடுகளில் கூட தேர்தல் சீட்டு முறைதான். அனைத்து அரசியல் கட்சியும் வாக்குபதிவு இயந்திரத்தில் முறைகேடு நடத்த முடியும் என்று கோரிக்கை விடுத்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது நியமற்றது.வாக்குப்பதிவு இயந்திரத்தில் 100 முறைகேடு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment