பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி யோகா…..!!

சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி யோகா ஆசிரியர் ஒருவர், ஆணி படுக்கையில் யோகாசனங்கள் செய்துள்ளார்.

திருவண்ணாமலையில் சுவாமி விவேகானந்த யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் சார்பில் யோகா ஆசிரியர் கல்பனா, உலக சாதனை முயற்சியாக இதனை செய்து காண்பித்தார். சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சைவ உணவின் முக்கியத்துவத்தினை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் ஆணி படுக்கையில் அமர்ந்து ஆசனங்களை செய்தார்.

2 ஆயிரத்து 555 இரும்பு ஆணிப்படுக்கையில் இருந்து கொண்டு தனூர் ஆசனம், பவழ முத்தாசனம், பவித்திர திருகோண ஆசனம் உள்ளிட்ட ஆசனங்களை அவர் செய்து காண்பித்தார். யோகாசனம் செய்வதால் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் கிடைப்பதாகவும் யோகா ஆசிரியர் கல்பனா கூறினார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment