#BIGBREAKING : தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் – தமிழக அரசு

#BIGBREAKING : தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் – தமிழக அரசு

புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய  உள்துறை அமைச்சகம்  அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ,வெளிமாநிலத்திலிருந்து (பாண்டிச்சேரி தவிர) தமிழகம் வருபவர்களுக்கும் , ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்பவர்களுக்கும் , இ பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube