கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு..!

திருப்பூரில் உள்ள புது ராமகிருஷ்ணாபுரத்தில் தாய் சேய் நல மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனைக்கு அதே பகுதியை சார்ந்த ஜோசப் என்பவர் தனது சகோதரி தேவியை  கர்ப்பகால சிகிக்சைக்காக அழைத்து சென்று உள்ளார்.
மருத்துவமனைக்கு சென்ற தேவிக்கு மயக்கம் ,வாந்தி வந்து உள்ளது.இதை தொடர்ந்து தேவியை பரிசோதனை செய்த மருத்துவர் அருண்ராஜ் ஊசி மூலம் மருந்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.பின்னர் செவிலியர் மூலம் தேவிக்கு ஊசி மூலம் மருந்து கொடுத்து உள்ளனர்.
அப்போது தனது தங்கையை பார்க்கவந்த ஜோசப் தேவிக்கு கொடுத்து வரும் மருந்தில் புழு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைத்தார்.இது குறித்து ஜோசப் மருத்துவர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது சகோதரியை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து சென்று உள்ளார்.
இது குறித்து மாநகர் நல அலுவரிடம் கேட்டபோது தமிழ்நாடு மருந்து கட்டுபாட்டு கழகத்தால் கொடுக்கப்பட்ட மருந்தில் இருந்தது தூசியாக இருக்கலாம்.மருத்துவமனைக்கு வந்த அனைத்து மருந்துகளும் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
 
 

author avatar
murugan