மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டிற்கு முன்னேறி இந்திய அணி அசத்தல்.!

மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டிற்கு முன்னேறி இந்திய அணி அசத்தல்.!

  • 3 நாடுகள் பங்கேற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
  • தாய்லாந்தை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இந்தியா, தாய்லாந்து, சுவீடன் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தாய்லாந்து ,இந்தியா ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.

இதன்மூலம் இறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது. கூடுதல் நேரத்தில் இந்திய வீராங்கனை கிறிட்டினா தேவி அந்த ஒரு கோலை அடித்தார். இதனால் இந்திய அணி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சுவீடனை எதிர் கொள்கிறது. அந்த அணி ஏற்கனவே 2 வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube