பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளின் கதவை தட்டிவிட்டு ஓடும் மர்மநபர்!திடுக்கிடும் தகவல்!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டை பகுதியில் சில நாட்களாக பெண்கள் தனியாக இருக்கும் வீட்டின் கதவை யாரோ தட்டி விட்டு ஓடி விடுவதாகவும் அவர்கள் திருடர்களாக இருக்க கூடும் என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இருந்த போது ஒரு சி.சி.டிவி காட்சி கிடைத்துள்ளது.அதில் மர்ம நபர் ஒருவர் வீடு வீடாக சென்று நோட்டமிட்டு,பெண்கள் தனியாக இருக்கும் வீட்டின் கதவை தட்டிவிட்டு ஓடி விடுகிறார் என்று தெரிய வந்தது.

மேலும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் மாடியின் வழியாக ஏறி உள்ளே இறங்க முயல்வது,ஆனால் ஆல் நடமாட்டம் காணப்பட்டால் சட்டையை கழற்றி விட்டு அக்குளில் வைத்து கொண்டு ஓடிவிடும் காட்சிகள் சி.சி டிவியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அந்த மர்ம நபர் மனநிலை பாதிக்கப்படடவராக இருக்க கூடும் என்று கூறுகின்றனர்.அதே சமயத்தில் காவல் துறையினரிடையே விசாரணை தீவிரமாகி வருகிறது.