சுதந்திர இந்தியாவில் பெண்கள் தைரியத்துடன் தடைகளை கடந்து வெற்றியை அடைய வேண்டும் : நடிகை மீராமிதுன்

நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகை மட்டுமல்லாது, மாடல் அழகியுமாவார். இவர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தென் இந்தியா போட்டியில் கலந்து பட்டத்தை வென்றுள்ளார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை மீராமீதுன், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், “நடுத்தர வர்க்கத்தில் பிறந்த சாதாரண ஒரு பெண் உச்சத்தை அடைய வேண்டுமென்றால், பல தடைகளை கடக்க வேண்டியதாக உள்ளது. சுதந்திர இந்தியாவில், பெண்கள் தைரியத்துடன் தடைகளை கடந்து வெற்றியை அடைய வேண்டும் என பதிவிட்டு, தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.