குண்டுப்பெண்கள் சொர்க்கத்திற்கு போகமாட்டார்கள் என கூறியதால் மேடையில் பாதிரியாரை தாக்கிய பெண்!

பிரேசிலில் உள்ள சர்ச் ஒன்றில் அந்த பகுதியில் புகழ் பெற்ற  பாதிரியாரான மார்சிலோ ரோஸி உரையாற்றி கொண்டு இருந்தார்.ஆயிரக்கணக்கான பொது மக்கள் இவரின் உரையை கேட்டு கொண்டு இருந்தனர்.அப்போது பேசி மார்சிலோ ரோஸி “குண்டுப்பெண்கள் சொர்க்கத்திற்கு போகமாட்டார்கள்” என கூறியதாக கூறப்படுகிறது.

அவர் பேசிய அடுத்த சில நிமிடங்களில் ஒரு குண்டு பெண் மேடையில் ஏறி மார்சிலோ ரோஸியை கீழே தள்ளி விட்டார்.உடனடியாக பாதுகாப்பிற்காக நின்ற பாதுகாவலர்கள் மார்சிலோவை தூக்கினர்.

பிறகு பேசிய மார்சிலோ , கவலைப்பட வேண்டாம் நான் நல்ல இருக்கேன்.லேசான வலி மட்டும் தான் வேற ஒன்றும் இல்லை என கூறினார்.மார்சிலோவை தாக்கிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அப்பெண்ணின் நண்பன் கூறியதால் கைது செய்யப்பட்ட அப்பெண்ணை விடுதலை செய்தனர்.

 

author avatar
murugan