வீட்டிற்குள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்!அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே புதுகரடு பகுதியை சேர்ந்தவர் தேவி.இவர் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.இவரது கணவர் சுரேஷ்.கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணாமாக சமீபகாலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றன.

இவர்களுக்கு ஒரு மக்கள் ஒரு மகன் உள்ளனர்.இந்நிலையில் ஜூலை 19-ம் தேதி வெகுநேரம் ஆகியும் தேவியின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது .இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் அக்கம்பக்கத்தினர் தேவி வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது தேவி ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் அடிப்படையில் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர்.

பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர் தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பிரேத பரிசோதனையில் தேவி கழுத்தறுக்கப்பட்டு நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது.

இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.