பெண் தொழிலதிபர் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் பெண் தொழில் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள லான்சன் டயோட்டா கார் நிறுவனத்தின்  விற்பனையாக இணை இயக்குனராக இருந்தவர் ரீட்டா லங்காலிங்கம் .இவர்  நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.