அழகிகளை வைத்து சொகுசு பங்களாவில் விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கர்!கண்ணிவைத்து பிடித்த காவலர்கள்!

  • சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கரை காவல்துறையினர் கண்ணிவைத்து பிடித்துள்ளனர்.
  • உல்லாசமாக இருந்த இரண்டு நபர்களோடு பெண் புரோக்கரையும் கைது காவல்துறையினர் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பு பகுதியில் ஒரு சொகுசு பங்களா உள்ளது.அதில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த பங்களாவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்கள் வந்து சென்றுள்ளனர்.இவ்வாறு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனால் காவல்துறையினர் அந்த பங்களாவை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் இருந்த போது சில வாலிபர்கள் அந்த பங்களாவிற்கு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக அதிரடியாக பங்களாவிற்குள் நுழைந்த காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.அப்போது அந்த பங்களாவில் 3 அறைகள் இருந்துள்ளது அதில் 3 இளம் அழகிகள் இருந்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்துள்ளது.அந்த அழகிகள் பெண் புரோக்கர் ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த இரண்டு நபரையும் அந்த பெண் புரோக்கரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பின்னர் அங்கிருந்த அழகிகளை மீட்டு அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.