மீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா?மு.க. ஸ்டாலின்

இன்று  நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில்  நீட்தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.இதன்பின்னர் எதிர்கட்சித் துணைத்தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி .

நீட் விவகாரத்தில் மீண்டும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.